Sunday, February 19, 2012

நிலையாமை


சருகாகி உதிரும்
காலம் வந்ததை
உணராமல்
தன் பன்நிற அழகில்
ஆணவமாய் மரங்கள்!

பின் அவை பெறும்
நிலையாமையெனும்
ஞானம்!

பனிக்கூதலில் அம்மணமாய்த்
தவமிருக்கும்
அடுத்த வசந்தமெனும்
வரத்திற்காக!

7 comments:

கூடல் பாலா said...

அருமை!

சசிகலா said...

வசந்தங்களை எதிர்நோக்கி .

மு. நன்மாறன் said...

கூடல் பாலா, சசிகலா வருகைக்கு நன்றி.

மு. நன்மாறன் said...

கூடல் பாலா, சசிகலா வருகைக்கு நன்றி.

Muruganandan M.K. said...

நிலையாமையை மனதிருந்தும்
சுவையான கவிதை
இயல்பான மொழி நடையில்.

மு. நன்மாறன் said...

வருகைக்கு நன்றி டாக்டர்

மு. நன்மாறன் said...

வருகைக்கு நன்றி டாக்டர்