வலையிலும் வாழும் தமிழ்
கவிதைவரிகளில் உலகைப்பார்க்கும் சிறுமுயற்சி
Saturday, December 7, 2013
ஹைக்கூ-1
இரவின் அமைதியை விழுங்கி
ஏப்பமிட்டுச் செல்கிறது
அம்புலன்ஸ் வண்டி
Sunday, February 19, 2012
நிலையாமை
சருகாகி உதிரும்
காலம் வந்ததை
உணராமல்
தன் பன்நிற அழகில்
ஆணவமாய் மரங்கள்!
பின் அவை பெறும்
நிலையாமையெனும்
ஞானம்!
பனிக்கூதலில் அம்மணமாய்த்
தவமிருக்கும்
அடுத்த வசந்தமெனும்
வரத்திற்காக!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)