Monday, September 7, 2009
வாழ்வதற்கு இறந்துவிடு
கல்லறைக் காலங்கள்..
அமைதியான நாட்கள்
பூக்களின் அழகில்
மயங்கலாம்
தென்றலின் பாட்டில்
கிறங்கலாம்.
வீணான காலங்கள்...
வாழ்வதாய் நினைத்திருந்தோம்
ஆனால்..
வாழ்ந்ததென்னவோ
நம்
எண்ணங்கள் தான்
பிறப்பால் மதங்களால்
பணத்தால் அறிவால்
உயர்வென்றும்
தாழ்வென்றும்
உள்ளத்தில் குடிகொண்டு
பின்
வாழ்வைக் குடித்த
எண்ணங்கள்.
இதோ மறுபிறப்பு!!
'நான்' இறப்பதற்கு
சரியான காலம்
ஏனெனில்..
வாழ்வியலை இம்முறையாவது
முழுமையாக
படித்து விட வேண்டும்.
Saturday, February 21, 2009
Subscribe to:
Posts (Atom)