Sunday, February 3, 2008

நிலையாமை

சருகாகி உதிரும்
காலம் வந்ததை
உணராமல்
தன் பலநிற அழகில்
ஆணவமாய் மரங்கள்!

பின் அவை பெறும்
நிலையாமையெனும்
ஞானம்!

பனிக்கூதலில் அம்மணமாய்த்
தவமிருக்கும்
அடுத்த வசந்தமெனும்
வரத்திற்காக.

Friday, February 1, 2008

காட்சியில் பிறந்த கவிதை


பனிப்பூக்களின் மரணம்

அழகின் சிகரம்

வியக்குது கைகள்