Monday, January 28, 2008

செந்தமிழ்

தேனினும் இனிய சுவையு மானது
வானினும் உயரிய புகழு மடைந்தது
தொன்மையும் இளமையும் ஒருங்கே கொண்டது
செவிக்கினிய எங்கள் தமிழ் மொழியே

கம்பன் கவி நயம் கொண்டதும்
அகிலம் போற்றும் குறளினைப் படைத்ததும்
ஐம் பெருங் காப்பியங் கண்டதும்
செவிக்கினிய எங்கள் தமிழ் மொழியே

முத் தமிழென வளர்ந்து வந்து
மூத்தோர் கையில் தவழ்ந்த தன்று
மேன்மை கண்டு நிலைக்கும் என்று
வாழ்த்திடுவோம் எம் தமிழ் மொழியினையே

Sunday, January 27, 2008

வணக்கம்

இது எனது முதல் வலைப்பதிவு.

விரைவில் என் கவிதைக் கிறுக்கல்கள் அரங்கேறும்.