பாதையோர மரங்கள்
அமைதியாக ஓடும் இந்த
வாழ்க்கை வண்டி
பாதை மாறிப் போவதுண்டு
சிலர் வண்டி
எப்படிக் கடந்தோம்?
தெரியவில்லை
எங்கே போகிறோம்?
புரியவில்லை
இருந்தும்...
அமைதியாக ஓடுது இந்த
வாழ்க்கை வண்டி
இறந்த காலமும்
தெரியாது
எதிர் காலமும்
புரியாது
ஒவ்வொரு நாளும்
வசந்தமென வாழும்
இம்மரங்களைப் போல
வாழ்வதனால்...
அமைதியாக ஓடுது இந்த
வாழ்க்கை வண்டி
2 comments:
///எப்படிக் கடந்தோம்?
தெரியவில்லை
எங்கே போகிறோம்?
புரியவில்லை
இருந்தும்...
அமைதியாக ஓடுது இந்த
வாழ்க்கை வண்டி///
புரியாமைதான் வாழ்வின் சுவாரிசியங்களை கூட்டி நிற்கிறது....
வாழ்த்துக்கள்ள..
தொடர்ந்து எழுதுங்கள்....
வருகைக்கு நன்றி ஜூவராஜ்
Post a Comment