Sunday, February 3, 2008

நிலையாமை

சருகாகி உதிரும்
காலம் வந்ததை
உணராமல்
தன் பலநிற அழகில்
ஆணவமாய் மரங்கள்!

பின் அவை பெறும்
நிலையாமையெனும்
ஞானம்!

பனிக்கூதலில் அம்மணமாய்த்
தவமிருக்கும்
அடுத்த வசந்தமெனும்
வரத்திற்காக.

No comments: